என்னவள் .....
Posted by
உனக்காக என் காதல் ...
யுக யுகமாய்
உன்னைக்
காதலித்திருக்கிறேன்
போலும்..
அதனால்தான்
உன்னைக்
கண்ட நொடியில்
யாரிவள்
எனக்கேட்காமல்
உன்னவள்
என்றது எனது மனது ....
புரியவில்லையா பெண்ணே .....
Posted by
உனக்காக என் காதல் ...
அன்பே !
நீ ரசித்து கொண்டு இருப்பது
பனி துளி அல்ல
என் காதல் வலியை கண்ட நிலா
இரவு முழுவதும்
சிந்திய கண்ணீர் துளி .....,
என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற
நிலவுக்கு புரிகிறது என் காதல் ,
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு
புரியவில்லையா பெண்ணே !
பனி துளி அல்ல
என் காதல் வலியை கண்ட நிலா
இரவு முழுவதும்
சிந்திய கண்ணீர் துளி .....,
என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற
நிலவுக்கு புரிகிறது என் காதல் ,
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு
என் காதல் நினைவுகள் ....
Posted by
உனக்காக என் காதல் ...
என்னவளே !!!
உன் நினைவுகள் -என்னுள்
இருக்கும் வரை -நம்
காதல் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும் !!!
உன் நினைவுகளே -நான்
உயிர் வாழ காரணம் !!!!
நம் காதல் நினைவுகள் -என்னுள்
இருக்கும் வரை நம் காதலுக்கு
மரணமில்லை !!!!
இன்னொரு ஜென்மம் என ஒன்று
இருந்தால் அப்பிறவியும் உனக்கு மட்டுமே !!!
உன்னுடன் வாழ்ந்த நினைவுகளை விட
உன்னை பிரிந்த நிமிடங்களில் தான்
உன் மீது நான் கொண்ட காதலின்
ஆழத்தை என்னால் உணர முடிந்தது !!!
என் காதல் உண்மை என்றால் -நான்
உனக்கு மட்டுமே சொந்தமாவேன் !!!
இல்லையேல் மண்ணோடு மண்ணாவேன்!!!
Subscribe to:
Posts (Atom)



