எப்போது சொல்வாய்................




ஒரு பார்வையால் 
ஓராயிரம்  
கதை சொல்லி 
என்னை பதறவைக்கும் 
உன் கண்கள் பிடிக்கும் ....

நிலவுக்குள் 
மின்னலடித்தது போல் 
என்னை நோக்கி 
நீ வீசும் உன் 
புன்னகை பிடிக்கும் ....

நள்ளிரவில் தெரியும் 
நட்சத்திரமாய் 
உன் கூந்தலில் 
ஒய்யாரமாய் 
உட்கார்ந்திருக்கும் 
ஒற்றை ரோஐh 
பிடிக்கும் ....


தேர் கொண்ட 
பார்வையால் நான் 
பார்க்கும் போதெல்லாம் 
நானிக் கவிழும் 
உன் பெண்மை 
பிடிக்கும் ....

உன்னில் எல்லாம் 
எனக்கு பிடித்துப்போக 
நீ எப்போது 
உன் செல்விதழால் 
சொல்வாய் 
என்னை பிடிக்குமென்று !!!!!!!!!!!!!! 



என்னவள் .....





யுக யுகமாய் 
உன்னைக் 

காதலித்திருக்கிறேன் 

போலும்.. 
அதனால்தான் 

உன்னைக் 

கண்ட நொடியில் 
யாரிவள் 

எனக்கேட்காமல் 
உன்னவள் 
      என்றது எனது மனது ....



புரியவில்லையா பெண்ணே .....





அன்பே ! 

நீ ரசித்து கொண்டு இருப்பது 

பனி துளி அல்ல 

என் காதல் வலியை கண்ட நிலா 

இரவு முழுவதும் 
சிந்திய கண்ணீர் துளி ....., 

என் விழி மூடும் நேரத்தில் வருகின்ற 

நிலவுக்கு புரிகிறது என் காதல் , 
என் விழிகளாக வாழ்கின்ற உனக்கு 

புரியவில்லையா பெண்ணே !





 

என் காதல் நினைவுகள் ....




என்னவளே  !!! 

உன் நினைவுகள் -என்னுள் 
இருக்கும் வரை -நம் 
காதல் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கும் !!! 

உன் நினைவுகளே -நான் 
உயிர் வாழ காரணம் !!!! 

நம் காதல் நினைவுகள் -என்னுள் 
இருக்கும் வரை நம் காதலுக்கு 
மரணமில்லை !!!! 

இன்னொரு ஜென்மம் என ஒன்று 
இருந்தால் அப்பிறவியும் உனக்கு மட்டுமே !!! 

உன்னுடன் வாழ்ந்த நினைவுகளை விட 
உன்னை பிரிந்த நிமிடங்களில் தான் 
உன் மீது நான் கொண்ட காதலின் 
ஆழத்தை என்னால் உணர முடிந்தது !!! 

என் காதல் உண்மை என்றால் -நான் 
உனக்கு மட்டுமே சொந்தமாவேன் !!! 

இல்லையேல் மண்ணோடு மண்ணாவேன்!!!