உண்மையான அன்பு ................



உண்மையான
  அன்புக்கு  மட்டுமே 
 உன்  கண்ணீர்  துளிகள்  தெரியும் 
நீ 
 மழையில்  நனைந்து   கொண்டே  
அழுதாலும் கூட ................



என் உயிரில் கலந்த உறவே....................!
நினைவுகள் கூட நிஜங்களாகும்
 நீ என் அருகில் இருந்தால்.................!





கனவுகள் கூட கவிதைகளாகும்
 கண்ணே உன் பார்வை பட்டால்................!


நொடிகள் கூட பொழுதுகளாகும்
 நீ என்னை நீங்கி சென்றால்...............!





தொலைவுகள் கூட நெருக்கம் ஆகும்,
 உன் நினைவில் மட்டும் நான் இருந்தால்..............!


செலவுகள் கூட வரவுகள் ஆகும்,
 அது உனக்கான செலவுகளாக இருந்தால்.............!


அன்பே உனக்காக எதையும் இழப்பேன்.............! 
ஆனால் நான் என்னை இழந்தாலும்.....!
 ஒரு போதும் உன்னை இழக்க மாட்டேன்..........! 
நம் இருமனம் சேர்ந்த ஒருவழிப் பாதையில்..................!!!!





காதல் விஷமென்று சொன்னார்கள்
நான் அவர்களை

பைத்தியக்காரர்கள் என்றேன்!

காதல் அமிர்தம் என்றார்கள் 

ருசித்து பார்த்தேன்


தயவு செய்து காதல் என்னவென்று
என்னிடம் கேட்காதீர்கள்
ஏனெனில் உணர்வுகளே இல்லாத
உடலுக்குள் நான்.................!!!!


இன்னும் ஓர் உயிர் .........



இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...

அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்...

மரணமில்லா உன் நினைவுகள்
இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....