பிறந்திருப்பேன் உனக்காக .....





நித்தமும் மனதில்
எத்தனை போராட்டம் 
இத்தனை காலம் வரை
குறையாத மனத் துயரம் 
சுகமான சுமையாக 
தொடர்ந்து நடக்கின்றேன் .
 
விரும்புகிறேன்  அனுதினமும் 
சொல்வதற்கு உன்னிடம் 
புரியவேண்டும் என் மனதை 
அறியவேண்டும்  அன்பினை .
 
விரும்பவேண்டும்  நீஎனை 
கேட்கிறது ஆசைமனம்
ஆனாலும் வேண்டாம் 
என்கிறது அறிவுமனம் .
விரும்புவதால் படும்துன்பம் 
வேண்டாம் உனக்கென்று.
 
மனதிலும் நினைக்கவேண்டாம் 
உறவாக என்னை 
எனை உருக்கும் என் துன்பம் 
உன்னை நினைத்தால் 
பறந்தோடும்.- ஆனால் 
உனை வருத்தும் உன்  துன்பம் 
உயிரின்றி  எனை அழிக்கும்.
 
முடிந்தால் மறுபடியும் 
பிறந்திருப்பேன் உனக்காக 
துணையாக எனை நீ
தொடர்ந்து வந்தால்..



0 comments:

Post a Comment